Wednesday 3 May 2017

கண்ணம்மா - என் கவிதை

ஆயிரம் நிலா ஒன்றாய் கூடும் வானம் ரசித்ததுண்டோ!
அரையடி தூரம் அமிலமாய் மாறி  உன்னைக் கொன்றதுண்டோ!
ஈர மண்ணில் தலைவியின் உடல் வெப்பம் உணர்ந்ததுண்டோ!
இன்று என்னும் நேற்று நாளைக்குள் காணாமல் போனதுண்டோ!
ஊமையாய் காதல் பேசும் பித்தம் தலைக்கேறியதுண்டோ!
உள்ளங்கையில் கால் மடித்து நிம்மதியாய் உறங்கியதுண்டோ!
ஏக்கமாய் உன்னை என்றும் பார்க்கும் அவள் கண்ணீர் துளிகள் சுவைத்ததுண்டோ!
எட்டு அடி எடுத்துவைத்து தனக்குள்ளேயே பேசிக்கொள்ளும் பெண்மை புரிந்ததுண்டோ!
ஓசையில்லா அவள் கண் கண்டு மௌனம் பேசியதுண்டோ!
ஒற்றை நொடி கைக்கோர்க்கும் காமம் களித்ததுண்டோ!
                  - கண்ணம்மா முதல்  பாரதி  வரை  உயிர் ஓடியது.
  

No comments:

Post a Comment