Wednesday 3 May 2017

அவள் சிணுங்கல்

"கையை விடுடா,நான் ஆபீ்ஸ்குள்ள போகனும்டா,என் செல்லம்-ல" என அவள் கெஞ்ச
" அப்படியா,அப்ப ஓரு முத்தம் கொடு" என நான் கண்ணங்கள் காட்ட
கண்ணத்தில் செல்லமாய் அடித்தவள் , "உன்னை நினைச்சிட்டு இருந்தா ஆபிஸ் ல
ஓரு வேலை நடக்க மாட்டுக்குது,போ இன்னைக்கு முழுசா உன்னைப் பத்தி நினைக்க போறதில்லை"
"ஓகோ..பார்க்கலாம்" என்றவனை,
கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாள்.
நான்கடி எடுத்துவைத்தவள் என்னை திரும்பி பார்க்க.
நான் அவளையே பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து வெட்கம் உதிர்த்து
சிரித்துக்கொண்டே தேவதையாய் மாறி ஓடினாள்.
தேவதையாய் கண்ணம்மா மாற பாரதி எப்பவும் போல் அவளிடம் சரணடைந்தான்.
- அவளுக்காக

No comments:

Post a Comment